Su. Samuthiram
திரு. சமுத்திரம் அவர்களுடைய உயிரோட்டமான படைப்புகள் எதுவாக இருந்தாலும் என்னுள் இயல்பாக எழுகின்ற உணர்வு இதுதான். மனிதனை பல கோணங்களில் பார்க்கிறார். அவனைப் பற்றி பீடித்திருக்கின்ற அழுக்கு இழுக்கு அவமரியாதைகளை துடைத்தெறிய சிறு கதை இலக்கியத்தை ஒரு போர்க் கருவியாக உபயோகிக்கிறார். அவனோடு சேர்ந்து அவனுடைய குற்றமற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார் சிரிக்கிறார். அவனோடு சேர்ந்து அழுகிறார். தன்னையே வறுத்திவதைத்துக் கொள்கிறார்- அவருடைய எழுத்துக்களை உணர்வு பூர்வமாக படித்தவர்கள் இதை உணர்வார்கள்.