K. A. P. Viswanatham
நான்மணிகள் என்பது நான்மணிக்கடிகை என்ற நூலின் மறுபிறவி, இதற்கு முன் என்னால் வெளியிடப்பட்ட மும்மணிகள், திரிகடுகம் என்ற நூலின் மறு பிறவியாகும். அது இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகி றது. செலவான நூல்கள் 12000. அத்துறையில் இப்பணி இரண்டாவது பணி. மூன்றாவது பணி சிறுபஞ்சமூலம். அது ஐம்மணிகள் எனப் பெயர் பெற்று வெளிவரும்.இந்நூல் கவிதையாக இருந்தமையால் புலவர்களால் மட்டுமே சுவைக்ககூடியதாய் இருந்து வந்தது. அதை எளிய நடையில் எழுதிப் பொதுமக்கள் அனைவரும் சுவைத்துப் பயனடைய வேண்டும் என்பதே இப்பணியின், நோக்கம்.