Ki. Va. Jagannathan
முதல் முதலாக நான் இலங்கைக்கு 1951-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று 18 நாட்கள் தங்கினேன். தலாது ஒயாவில் உள்ள திரு கணேஷ் என்னும் அன்பர் கண்டித் தமிழ் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைத்தார். அதனல் சென்றேன். தமிழ் விழா நடைபெற்ற பிறகு கிட்டத்தட்ட ஆயிரம் மைல் என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார், அது முதல் அவர் எனக்குத் தம்பி ஆகிவிட்டார். அவருடைய அன்பே இலங்கைக் காட்சிகளைக் காணச் செய்தது.பல இடங்களே நான் கண்டேன். அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய கட்டுரைகளேத் தொடர்ச்சியாகக் கலைமகளில் எழுதி வந்தேன். கதிர்காமம் சென்ற வரையிலும் எழுதினேன். அப்பால் எழுதவில்லை. கதிர்காமத்திலிருந்து கேரே கொழும்பு வந்து ஒரு நாள் தங்கினேன். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் இருந்தேன். அந்த ஒரு நாளில் பல இடங்களைப் பார்த்தேன்.