K. A. P. Viswanatham
நண்பர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். தமிழ் மேடையுலகிலும், தமிழ்த்தாள் உலகிலும் சிறப்புடன் காட்சியளித்து மக்கள் மனத்தினைக் கவர்ந்து வருகின்றார்.தமிழ் நாட்டினையும் தமிழ் மொழியினையும் பற்றி எண்ணிவரும் ஒரு சிலரில் இவர் ஒருவர். இவர் எழுதிய ஐந்து கட்டுரைகள், 'ஐந்து செல்வங்கள்' என்ற அழகிய பெயரோடு வெளிவருகிறது.சிறந்த கருத்துக்களை எளிய முறையில் பசுமரத்தாணி போலப் பதிய வைப்பதில் ஆசிரியர் சிறந்து விளங்குகிறார்.